tamilnadu

img

உ.பி.-யில் ஜூன் 30 வரை கடும் கட்டுப்பாடு....

லக்னோ
நாட்டின் வடபகுதி மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக ஆக்ரா போன்ற சுற்றுலா பகுதிகள் கடும் சேதாரத்தைச் சந்தித்து வரும் நிலையில், அங்கு இதுவரை 1621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் கொரோனா அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் அம்மாநில அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், இதனை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் என உ.பி. முதலமைச்சர் யோகி  ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.